புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல்

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல் 

புனித அந்தோணியார் பிரான்சிஸ்கன் சபையில் சேர்தல் -st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோணியார் மடத்தின் பெயரால் அந்தோணி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். 

சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். 

அன்றுமுதல் அந்தோணியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோணியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக